பெர்லின்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது.
ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த மக்கள், கொரோனாவின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றனர். நேற்று முன்தினம்(மார்ச் 21) மட்டும், 800 பேர், நேற்று(மார்ச் 22) 651 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஜெர்மனி, இத்தாலியை விட அதிக மக்கள் தொகை உடைய நாடு. ஆனாலும், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதில், ஜெர்மனி டாக்டர்களும், சுகாதார ஊழியர்களும், மற்ற நாடுகளுக்கு முன் உதாரணமாக விளங்கி வருகின்றனர்.
ஜெர்மனியில் 24,852 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், இதுவரை, 94 பேர் மட்டுமே இறந்துள்ளனர். டாக்டர்களின் தீவிரமான நடவடிக்கையே, இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில், 1.60 லட்சம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை டாக்டர்கள் உடனுக்குடன் முடிவு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.